சென்னை:
தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கட்டடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என்றும், உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையிலே அனுமதி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.