சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் கோடை மழை தொடங்கியதால் மேலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதக தெரிவித்துள்ளது.

பொதுவாக தமிழகத்தில் மார்ச் மாதத்தில் இருந்தே கோடை மழை ஓரளவுக்கு பெய்யத் தொடங்கிவிடும். இந்த ஆண்டு கோடை காலம் வாட்டி வதைக்க தொடங்கியதில் இருந்து கோடை மழை பரவலாக பெய்யவில்லை.  மார்ச் மாதம் முதல் நேற்றைய நிலவரப்படி, சராசரியாக 7 செ.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழையை மட்டும் தூவி வருகிறது  இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. பிற இடங்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதாவது தமிழகத்தில் கோடை மழை தாமதமாக பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. தற்போது  தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் 7-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

வரும் 8-ந்தேதி (புதன்கிழமை) தமிழக்த்தில்ல் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்கள், தென்காசி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்கள் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.