சென்னை: நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும். தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்  சாமானியர் ஒருவரின்  கருத்தை வீடியோவாக  பதிவிட்டுள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!

இவ்வாறு கூறியுள்ளார்.