“தடம்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார்.

இயக்குனர் விவேக் இயக்கும் இப்படத்தை எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அருண் விஜய்க்கு ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானி பயிற்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அருண் விஜய் தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.