சென்னை: நெஞ்சுவலி மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீர் நெஞ்சுவலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்ச் 15ந்தேதி அனுமதிக்கப்பட ஈரோடு கிழக்கு  தொகுதி எம்.எல்.ஏ.,  ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நிலை தேறி வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு  கொரோனா தொற்றும் இருப்பது கண்டறியப்பட்டரது. இதனால் அவதிப்பட்ட அவர் மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. அவரது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.