பத்திரிகையாளர்களைப் பார்த்து உப்பு போட்டு சாப்புடுறீங்களா ? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை பின்னால் ஊடகத்துறையின் நாள்தோறும் சுற்றிவருகின்றனர்.

தவிர, அவரது உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை துரும்பாக சேகரித்து நாடுமுழுவதும் உள்ள பல்வேறு ஊடங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலையிடம் மத்திய மோடி அரசு தேர்தல் நேரத்தில் சிலிண்டர் விலை குறைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அண்ணாமலை அங்கிருந்த செய்தியாளர்களை உப்பு போட்டு தானே சாப்பிடுகிறீர்கள் என்று பேசி திசை திருப்பியதோடு மோடி அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கூறாமல் மாற்று கட்சியினரிடம் இதுபோன்ற கேள்வி எழுப்பியுள்ளீர்களா என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

பத்திரிகையாளர்கள் என்றால் கொம்பு முளைத்தவர்கள் அல்ல என்று எகத்தாளமாக பேசிய அவர் கடைசி வரை தன்னிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களிடம் கோதாவில் ஈடுபட்டது பத்திரிகையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.