புதுடில்லி

டெல்லி அமைச்சர் அதிஷி பாஜக டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வர சதி செய்வதாகக் கூறியுள்ளார்

கடந்த மாதம் 21 ஆம் தேதி அன்று மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். எ அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார்.

அதைத்  தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன எனவே தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி,

”பொய்யான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் அட்சியக் கொண்டு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டு சதி செய்கிறது. 

டெல்லியில் எந்த அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்படுவதும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகாரிகளை கூட்டங்களில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கின்றனர்.” 

என்று கூறியுள்ளார்.