வெங்கட் பிரபு, சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தை இயக்கிவருகிறார்.

இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘மின்சாரக் கனவு’ என்ற வெற்றிப் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.