டில்லி:

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தர விடக்கோரி தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தில் பதிலை ஏற்று வழக்கை  முடித்து வைத்தது உச்சநீதி மன்றம். இதன் காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவத மேலும் தள்ளிப்போவது உறுதியாகி உள்ளது.

 

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு, பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தில் அறிவிப்பை எதிர்த்தும், விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளையும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று  திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் சரியான நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவசர கதியில் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதை ஏற்காத திமுக, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்  ஏப்ரல் 18ந்தேதி இல்லையென்றாலும்,  அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறும்  தேர்தலுடன் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் வாதிடப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,  ஒரு தொகுதிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றால் 24 நாட்கள் அவகாசம் வேண்டும்  என்றது.

தேர்தல்ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று  மறுத்துவிட்டனர்.

மேலும், உரிய நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிவுரை கூறி  திமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.

 

++

இந்த நிலையில், வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மற்ற தொகுதிகளுடன் சேர்த்து, அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதியுடன், எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட சூலூர் தொகுதி உள்பட 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான தேதி முடிவடைந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் வேளையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலோடு, 3 தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.