சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு  செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலமாக  அடிப்படை மானியமாக ரூ.799 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையும்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம ஊராட்சிகளுக்கு ரூ.639 கோடியும், ஒன்றியங்களுக்கு ரூ.119 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மேலும்,  ரூ.552 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.