டிகர் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இதுபர்றி மும்பை போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே கே.சிங் பாட்னா போலீசில் புகார் அளித்தார். சுஷாந்த் தற்கொலைக்கு சுஷாந்த்தின் காதலி ரியா தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்த்து ரியா, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. சுஷாந்த் வழக்கை சிபிஐக்கு அனுப்ப தயார் என மத்தியரசும் தெரிவித்திருக் கிறது.


சுஷாந்த்தைப்போலவே மற்றொரு இந்தி நடிகர் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளது.
இந்தி பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரித்த ’ஹசி து பாஸி’ உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் சமீர் சர்மா. பல்வேறு இந்தி டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். மும்பையில் மலாடு பகுதிக்கு கடந்த சில மாதங் களுக்கு முன் குடிவந்த சமீர் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாட்கைக்கு எடுத்து தங்கினார். சமீபமாக இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி காவாலாளியும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்துபார்த்தபோது சமீர் சர்மா மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மற்றொரு அதிர்ச்சியை நடிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.