சென்னை:

ரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன் தனது 2வது கட்ட சுற்றுப்பயணம் குறித்த தேதியை அறிவித்து உள்ளார்.

அதன்படி வரும் மார்ச் 10,11ம் தேதிகளில்  ஈரோடு, திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த மாதம் 21ந்தேதி அப்துல கலாம் பிறந்த மண்ணில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், அன்று இரவு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கட்சியின் பெயர், கொடி, சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், தனது 2வது கட்ட சுற்றுப்பயணமாக வரும் (மார்ச்) 10,11ம் தேதிகளில் கமல் ஈரோடு, திருப்பூர் செல்கிறார்.

அப்போது,  அவிநாசி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாகவும்,  கட்சி கொடியை ஏற்றி வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது,  அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளை சந்தித்து பேசவும் கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.