டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் இன்று பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது போலீஸ் காவல் மேலும் 3 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை ஏற்கனவே 6 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இன்று மீண்டும் பாட்டியாலா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ தரப்பில்  அவரிடம் மேலும் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால், மேலும் 8 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும என்று சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரத்தில் நடைபெற்ற விசாரணை குறித்து சிபிஐ சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்ததை. அதையடுத்து விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிற்பகல் நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரம் மீதான போலீஸ் காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வரும 9ந்தேதி அவர் மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

முன்னதாக கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சராக ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தனர்.