சென்னை

பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். இடையில் பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரைச் சந்தித்து பேசுவதற்காக அண்ணாமலை டில்லி சென்றார். இதனால் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணம், நாளை மறுநாள் (6-ந்தேதி) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் வரும் 16 ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ளது.