சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர்  தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை.

தமது வேலையை ராஜினாமா செய்த அவர், சில தினங்களுக்கு முன் பாஜக தேசிய தலைவர் நட்டா, மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந் நிலையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டு உள்ளார். அவரது பணி சிறக்க வாழ்த்துகள் என்றும் அந்த அறிவிப்பில் முருகன் கூறி இருக்கிறார்.