கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட ‘அஞ்சாம் பாத்திரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமான முறையில் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைப் பற்றிய விசாரணையே இந்தப் படம்.

தற்போது இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘ஆறாம் பாத்திரா’ என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
குஞ்சாகோ போபனும் டாக்டர் அன்வர் ஹுசைன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் போபன், “எதிர்பார்ப்புகள் அதிகமாகும்போது பொறுப்புகளும் அதிகமாகும். ‘அஞ்சாம் பாத்திரா’ இரண்டாம் பாகத்துக்குத் தயாராவது அப்படி ஒரு மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் எங்களிடம் இருக்கும் சிறப்பான குழுவால் அது சாத்தியமே. மீண்டும் ஒரு சுவாரசியமான பயணத்துக்குத் தயாராகுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.