ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வைரமுத்து கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியது. ஸ்ரீவில்லிபுத்தூர் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜீயருக்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள். நான் சீனியர். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்’’ என்றார்.