டில்லி:

ன்புமணி மீதான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு ஆகஸ்டு 29ந்தேதி முதல் மறுவிசாரணை தொடங்கும் என்றும் சிபிஐ நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக  2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பாமக இளைஞர் அணித்தலைவர்  அன்புமணி ராமதாஸ். அப்போது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து,  உத்தரப்பிரதேச மாநிலம் ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிகளில், உரிய கட்டமைப்புகள் இல்லாத நிலையிலும் அன்புமணி ராமதாஸ். அக்கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார்

இது தொடர்பாக புகார் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு பதிந்து சி.பி.ஐ. விசாரித்துது,  அமைச்சருக்குரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உரிய கட்டமைப்புகள் இல்லாத அக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி அளித்ததாக அன்புமணி மீது சி.பி.ஐ. இரு வழக்குகளை பதிந்தது.

இந்த வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்தூர் மருத்துவக் கல்லூரி வழக்கில் அன்புமணி உள்பட 9 பேர் மீதும், ரோஹில்கண்ட் கல்லூரி வழக்கில் அன்புமணி உள்பட 6 பேர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக விசாரணையிலிருந்து வந்த நிலையில், இவ்வழக்கை மறு விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதையடுத்து,  டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி,  சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளை இந்திய மருத்துவ கவுன்சில் சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோவை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று முதல் மறு விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார்.