சென்னை

க்களுக்கு பாஜகவின் ஊழலைத் தெரியப்படுத்தப் போவதாகத் தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ஆனந்த் சீனிவாசன் கூறி உள்ளார்

நேற்று தமிழ காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சத்தியமூர்த்திபவனில் பதவியேற்றுக் கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம்,

“திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இருகட்சிகளின் தலைமையும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பேசி நல்ல முடிவெடுக்கும். 

இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும். நான் மக்களுக்கு பா.ஜ.க.வின் ஊழல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவேன். 

மக்களின் உயிரோடு பதஞ்சலி யோகா விளையாடி உள்ளது.  உச்சநீதிமன்றம் ஆயுஷ் அமைச்சரவை கண்ணை மூடியுள்ளதாகக் கண்டித்துள்ளது. 

தமிழக மக்களுக்கு இது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்லவே கட்சித் தலைமை என்னை இந்த பதவியில் நியமித்துள்ளது.” 

என்று கூறினார்.

TN Congress, IT Chief, Anand Srinivasan, Sworn,