சென்னை:

யோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று  நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று சிறப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு பல அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்த உள்ளன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்,  தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று கூறியவர், இந்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றார்.

மேலும் அனைவரும் இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.