ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண நிகழ்ச்சி ஏப்ரல் 16 அன்று நடைபெற இருக்கிறது.

ஏப்ரல் 13 அன்று ஒரு மெஹந்தி விழாவுடன் தொடங்கும் இந்த திருமண விழாவின் ஹால்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சி ஏப்ரல் 14 அன்று நடைபெறுகிறது.

மும்பையின் செம்பூரில் உள்ள கபூர் குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ஆர்.கே. ஹவுஸில் ஏப்ரல் மாதம் 16 ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

இதற்கான திருமண ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம் குறித்த தகவல் வெளியானது முதல் அவர்கள் அணிய இருக்கும் ஆடைகள், ‘வெட்டிங் தீம்’ உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அவரது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

“இந்த திருமண நிகழ்ச்சிக்கு யூசுப் பாய் தலைமையிலான மும்பையின் மிகச் சிறந்த பாதுகாப்பு நிறுவனமான 9/11 பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது” என்று ஆலியா பட்டின் உறவினர் ராகுல் பட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்நிறுவனத்தைச் சேர்ந்த 200 பவுன்சர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவிர ட்ரான் கேமராக்களும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

விருந்தினர்களின் பாதுகாப்பை கண்காணிக்க வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் பாதுகாப்பு அலுவலர்களின் ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால், மும்பையின் ஆர்.கே. ஸ்டூடியோ, ரன்பீர் கபூரின் வசிக்கும் பாந்த்ரா பகுதி மற்றும் செம்பூர் என அனைத்து பகுதிகளும் திருமண விழாவுக்கு தயாராகி வருகிறது.