சென்னை:
ட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் பல இடங்களில் அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் அதிகரித்து உள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சதிருதியை என்பது கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதை நகை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்படி இந்தாண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 5.18 மணிக்கு தொடங்கி, நாளை காலை 7.32 மணி வரை இருக்கிறது. அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை, பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்க அதிகளவில் கடைகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.