சென்னை; நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தகனம் இன்று முற்பகலில் பெசன்ட் நகர் இடுகாட்டில்  நடைபெறுகிறது.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சியினர், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  அமைச்சர் உதயநிதி நேரில் சென்று  அஜித்குமார் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகரில் இன்று காலை நடைபெறுகிறது   அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,   “நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்; தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர்  அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி அவர்கள், நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியன் உடலுக்கு  நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்