சென்னை

சென்னை நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் பல்வேறு பகுதிகளில் மக்கள் தற்போதே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர். பட்டாசுகள் அதிக அளவில் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

தற்போது சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று இரவு முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கியுள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் காற்று மாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது.

அதாவது சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்றுள்ளது. மேலும் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230,பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, வேலூரில் 123, ராயபுரத்தில் 121, கொடுங்கையூரில் 112 ஆக உயர்ந்துள்ளது.