Skip to content
  • Mon. Sep 14th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

25ந்தேதி முதல் மதுரை-மும்பை இடையே மீண்டும் ஏர்இந்தியா விமான சேவை…

Oct 19, 2020

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகளை மீண்டும் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல்  மதுரையில் இருந்து மும்பைக்கு மீண்டும் விமானம் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.


நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.  தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுமுடக்கம் நவம்பர் 31 ந்தேதி வரை அமலில் உள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி  முதல் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு தினசரி விமான சேவை நடைபெற்று வந்த விமான சேவை   நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் விமான சேவை தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
அதன்படி,  மும்பை- சென்னை- மதுரை- சென்னை-மும்பை விமான சேவையும் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

விமானம் காலை 9.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
அதன்பின்னர் அங்கிருந்து 12.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
பின்னர் அதே விமானம் மதுரையில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்னை செல்கிறது.
அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 6.15 மணிக்கு மும்பையை சென்றடைகிறது.
இந்த விமானம் தினமும் இதே நேரத்தில் இயக்கப்படுகிறது.
பயணிகளின் வருகையை பொறுத்து விமான சேவைக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம்.
இதற்கான டிக்கெட்டுகளுக்குwww.airindia.in என்ற இணையதளத்திலும், மதுரை விமான நிலையத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிவித்து உள்ளது.

Post navigation

முதல்வரின் தாயார் மறைவு : இன்று தமிழக முதல்வரைச் சந்திக்க உள்ள முக ஸ்டாலின்
முதலமைச்சருடன் ஸ்டாலின் சந்திப்பு! தவுசியம்மாள் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer