சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் fகாலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி காலமனார்.

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் (ஜூலை) 20 ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் இன்று முற்பகல் அறிவித்தது.

இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்தனர். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், மதுசூதனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.