சென்னை,

போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் டி.ராஜேந்தர்.

லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் தெரிவித்ததாவது:.

“இலங்கைக்காக மட்டுமில்லை.. மாட்டின் சலங்கைக்காகவும் போராடுவேன்.

அதிமுக எம்பிக்கள் போயஸ் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார்களா?  டில்லி சென்ற இவர்களை   பிரதமர் சந்திக்கவில்லை. காரணம், இவர்களது லட்சணம் அப்படி.

எம்பிக்கள் வீரத்துடன் கேள்விக் கேட்க வேண்டும். இவர்கள் அப்படி இல்லையே.

நான் பூங்காநகர் எம்எல்ஏவாக இருந்தபோது பலமுறை அரசை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதனை எதற்காகவும் விட்டுகொடுக்க முடியாது.

தமிழர்களின் பாரம்பரியவிளையாட்டான ஜல்லிக்கட்டை பாஜக ஆதரிக்கவில்லை”  என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்..