ஆம்பூர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆம்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில்,  அங்கு கூடிய இஸ்லாமிய மக்களிடையே பேசும்போது, உலமாக்களின் சம்பளத்தை டபுளாக உயர்த்தியது  அதிமுக அரசு என்று சுட்டிக்காட்டி பேசினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல்  இன்னும் 3 மாதங்களுக்குள்  நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி5வது கட்ட பிரசாரத்தைநேற்று வேலூரில் தொடங்கி உள்ளார்.  , வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.