சென்னை; அதிமுக  பொதுக்குழுவிற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மனு மீதானவிசாரணையின்போது, ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று 10ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்து வழக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இன்று உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓபிஎஸ் தரப்பில்,  மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என  கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை மறுநாளுக்கு (ஆகஸ்டு 10ந்தேதி) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன். ஒத்திவைத்தார். அன்றை தினம் பிற்பகல் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.