சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா  தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில்  சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலமானார். அதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். ஆனால், சசிகலா, முதல்வராக எண்ணி, ஓபிஎஸ்-ஐ மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதால் அதிமுக உடைந்தது. பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வாக்கில் சிறைக்கு சென்றதும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினர் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலா மற்றும் மன்னார்குடி வகையறாக்களை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள்  மனுத் தாக்கல் செய்தனர். வழக்கின் கடந் விசாரணையின்போது, டிவி தினகரன் அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கபட்டது. ஆனால் சசிகலா தொடர்ந்து வழக்கை நடத்துவதாக கூறினார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.