சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நியமனத்தை எதிர்த்த வழக்கில், அவர்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர்,  அதிமுக கட்சி விதிகளின் படி, புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும், ஜெ.மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிமுக பிளவு காரணமாக, அதிமுக கட்சி விதிகளை மாற்றம் செய்து, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டார்கள்.  இது அதிமுகவின் விதிகளுக்கு முரணானது, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உட்கட்சியில் தேர்தெடுக்கப்படும் தலைவர்கள், நிர்வாகிகள் குறித்து உள்ளே நுழைந்து ஆராய முடியாது என்று கருத்து தெரிவித்தத நீதிபதிகள், கட்சிகளின் பிரதிநிதிகள் அளிக்கும் பிராமண பத்திரத்தை ஏற்றுக்கொண்டு அனுமதி அளிப்பது, அளிக்காதது தேர்தல் ஆணையத்தின் முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என  தெரிவித்துள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஓங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றத்தில் தவறில்லை என்று கூறி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமனத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.