சென்னை:  சென்னை, கோவையில் செயல்பட்டு வரும்  தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் சென்னை, கோவை என பல தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக இமெயில் மூலம் வெடிகுண்டு க மிரட்டல் வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச்சென்றனர். காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை  நடத்தினர். இதையடுத்து, அது போலி மிரட்டல் என தெரிய வந்தது.

இந்சத நிலையில், இன்றும் சென்னை  கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு  மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது. இன்று இரண்டாவது முறையாக அதே பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலையில் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சென்னையிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.