சென்னை:
றைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள் செயல்படாது என்பதால், கடந்த வார சனி மாலையே வாங்கிச்சென்று, குளிர்சாதனை பெட்டிகளில் பத்திரப்படுத்தினர்.

இந்நிலையில், இறைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்ட நாளில் கட்டாயம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பது போன்றவற்றை பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இறைச்சி மற்றும் மீன் கடைகள், மார்கெட்களில் மீண்டும், மீண்டும் கூட்டமாக கூடி தொற்று பரவலுக்கு காரணமாகி விடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பத்டுள்ளதுள்ளது.