சென்னை

க்களவை தேர்வில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனுக்களைப் பெறக் கால அவகாசம் புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அ.இ.அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களைத் தலைமை அலுவலகத்தில் 21.2.2024 முதல் 1.3.2024 வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் தங்களுடைய விருப்ப மனுக்களைத் தலைமைக் கழகத்தில் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, (6.3.2024) புதன்கிழமை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. 

ஆகவே, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட தேதிக்குள் உரியக் கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

என்று கூறப்பட்டுள்ளது.