சென்னை: வரும்  28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கு ஆளும்கட்சியான அதிமுக தயாராகி வருகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., ஆகியோர், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் முடிந்த நிலையில் கட்சி தலைமை இன்று ஒரு முக்கிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. வரும் 28ம் தேதி காலை 9.45 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூட்டத்தில் அனைவவரும் தவறாமல் பங்றே்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.