சென்னை: தீபாவளியையொட்டி, கன்னியாகுமரி, முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, சில சிறப்பு ரெயில்களில் நவம்பர் மாத முதல் வாரத்தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி,

தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் (வண்டி எண் 02694) சிறப்பு ரெயிலில் அக்டோபர் 30 ந்தேதி முதல் நவம்பர் 7 ந்தேதி வரையும், மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் (வண்டி எண் 02693) சிறப்பு ரெயிலில் நவம்பர் 2 ந்தேதி முதல் நவம்பர் 10 ந்தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரெயிலில் (வண்டி எண் 02633) அக்டோபர் 31 ந்தேதி முதல் நவம்பர் 8 ந்தேதி வரையும், மறுமார்க்கத்தில் வண்டி எண் 02634 கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரெயிலில் நவம்பர் 1 ந்தேதி முதல் நவம்பர் 9 ந்தேதி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.