கொரோனா அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் பல படங்களின் பின் தயாரிப்புப்பணிகளை தொடங்கியது. பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பாணிக் பிரதான பாத்திரங்களில் நடித்த, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘யாருக்கும் அஞ்சேல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின.

தர்ட் ஐ என்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜூலு மார்கண்டேயன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவியும் தர்ஷனா பாணிக்கும் துணிச்சல் மிக்க சகோதரிகளாக நடித்திருக்கின்றனர். சவால் மிகுந்த ஊட்டியின் தட்பவெட்ப சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தொடர்ந்து முப்பது நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடித்தி ருக்கிறது படக்குழு.
ஊட்டியில் உள்ள தங்கள் பாரம்பரிய சொத்தை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் சகோதரிகள் இருவருக்கும் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான பிரச்னைகளையும், அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார்கள் என்பதையும் விறுவிறுப் பாக விவரிக்கும் படம் ‘யாருக்கும் அஞ்சேல்’.
கொரோனாவுக்கு முன்பே, முழு படப் பிடிப்பையும் பூர்த்தி செய்து விட்டது என்றா லும், பிரச்னை தீவிரமான தால்,தொடர்ந்து பின் தயாரிப்புப் பணிகளைத் தொடர முடிய வில்லை. தற்போது படக்குழு டப்பிங் பணி களைத் தொடங்க, பிந்து மாதவி யின் குரல் பதிவு பணிகள் இன்று நடைபெற் றன.
சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவித்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியான முறையில் பின்பற்றி தொடர்ந்து மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.