இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . அதேபோல் அனுபம் கேர் குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை ரேச்சல் வைட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தமிழில் மங்காத்தா படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ரேச்சல் அதிகமாக இந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.