சென்னை

சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருக்காக சாய்பாபா கோவில் ஒன்றைக் கட்டி உள்ளார்

சமீபட்தி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார். அவர் தற்போது நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்துக்குப் பிறகு இன்னொரு படத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்.

தற்போது நடிகர் விஜய் சென்னை கொரட்டூரில் புதிதாக சாய்பாபா கோவிலை கட்டி கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்துள்ள விவரம் வெளியாகி உள்ளது. இந்தக் கோவி சுமார் 15 கிரவுண்டில் கட்டப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் கலந்து கொண்டனர்.

நைகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தீவிர சாய்பாபா பக்தர் என்பதால் தாயாருக்காக இந்த கோவிலை அவர் கட்டியதாக கூறப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகிறார்கள். இத சாய்பாபா கோவிலில் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.