நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

சூர்யா என்னப்பா ஆச்சி உங்களுக்கு… அஞ்சான் படத்தோட படு தோல்வியிலும் அசராம சிரிச்சீங்களே…மாஸ் படத்தோட காணாம போய்டுவிங்கன்னு கலாய்ச்சப்பக்கூட கவல படாம இருந்திங்களே… சூர்யா என்னப்பா ஆச்சு உங்களுக்கு…
இந்த வசனத்தை வைத்து தான் சூர்யாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். எதுக்காக கலாய்க்கின்றார்கள் என்றால் நடிகர் சூர்யா, தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்ட வீடியோ மூலம் நமக்கு நாமே என்பது போல், அவருக்கு அவரே அசிங்கத்தை தேடிக்கொண்டுள்ளார், காக்க காக்க படத்தின் விழாவின் போது, நடிகர் சூர்யாவை பாராட்ட நடிகர் ரஜினி அந்த விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது ரஜினி இந்த படத்தை பார்த்துவிட்டு பேசியதாவது :-
“இந்த படத்தை பார்க்க முகத்தை மூடிக்கொண்டு நான் பொங்களூரில் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அது மட்டுமல்லாமல், முதலில் இவருக்கு நடிப்பும் வராது. நடனமும் வராது. ஆனால் இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்துள்ளார். நடனமும் ஆடியுள்ளார்” என்றார் ரஜினி. இந்த வீடியோவை சூர்யா பதிவிட்டதும் ரசிகர்கள் பலர் அவரை கலாய்த்து தள்ளிவருகின்றனர்.
இது தேவையா…? எல்லாம் ஒரு விளம்பரம்…..
https://www.instagram.com/p/BNEDcs0hW0V/?taken-by=surya.sivakumar