சென்னை: மனித உரிமை காக்கும் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நடிகர் கார்த்திக் ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து நேற்று அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந் நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக சென்னை அடையாறில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.