பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி தனது நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் த்ரிஷா-வுடனான ரொமான்ஸ் காட்சிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

அதேவேளையில் நடிகர் கார்த்தி-க்கு வெளிநாட்டு ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கார்த்தியின் தீவிர ரசிகர்களான ஜப்பானைச் சேர்ந்த டெருமி மற்றும் ஐசாவ் சான் நடிகர் கார்த்தியை சந்திக்க நேற்று சென்னை வந்துள்ளனர்.

அவர்களை வரவேற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் கார்த்தி இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முத்து படம் தொடங்கி ஜப்பானில் அதிக ரசிகர்களை கவர்ந்துவரும் ரஜினிகாந்த்தை அடுத்து கார்த்தி-யும் அங்குள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.