நடிகர் தனுஷ் சென்னையில் புதிதாக வீடுகட்டி பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக வலம்வந்த நடிகர் தனுஷ் தனது பங்கிற்கு போயஸ் கார்டனில் புதிதாக இடம்வாங்கி வீடு கட்டியுள்ளார்.

இந்த புதிய வீட்டில் நேற்று பால் காய்ச்சி குடியேறிய தனுஷ் தனது குடும்பத்தினருடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்யநாராயணாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழும் நிலையில் இந்த பால் காய்ச்சும் விசேஷத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை.

அதற்கு பதிலாக பெங்களூரில் தனது பெரியப்பா-வின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியானது.