சென்னை:
10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்தியச் சிறையில் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது தொடர்பான பட்டியல் 20 நாட்களில் தயாரிக்கப்படும் என்று கூறினார்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெடிகுண்டு, தேசத் துரோக வழக்கு, கொடும் குற்றம் செய்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு அந்தப் பட்டியல் தயாரிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வை ரத்து  செய்யும் சட்டப்பூர்வமாக  நடவடிக்கைகளில் முதலமைச்சர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.