திருவனந்தபுரம்
நடிகை பிரீத்தி ஜிந்தா கேரள காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பா.ஜ.க.விடம் ஒப்படைத்ததாகவும், இதன் காரணமாக வங்கியில் அவர் வாங்கிய 18 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கேரள காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
நடிகை பிரீத்தி ஜிந்தா’எக்ஸ்’ தளத்தில்
“எனது சமூக வலைதள பக்கங்களை, நான் மட்டுமே கையாண்டு வருகிறேன். எனது கடனை யாரும் தள்ளுபடி செய்யவில்லை, நான் 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட்டேன்.
எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி அவதூறு பரப்புவது அதிர்ச்சி அளித்துள்ளது. இதுபோன்று போலி செய்திகளை காங்கிரஸ் பரப்புவது வெட்கக் கேடான செயல்
என்று பதிவிட்டுள்ளார்.