சென்னை: அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் வேண்டாம் அமைச்சரே… ஆதாரம் இருக்கா, இல்லையென்றால் வழக்கை எதிர்கொள்ளுங் கள் என தமிழ்நாடு மாநில தலைவர்  அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபின் அறநிலையத்துறை ஒரு கோவிலையாவது கட்டியிருக்கிறார்களா? கோவில் உண்டியல் பணத்தை வைத்து அதே கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசின் நடவடிக்யை பாஜக மற்றும் எதிர்க்கட்சகிள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், வடநாட்டில் இருக்கிற நிறுவனங்களை இங்கே கொண்டு வர சிலர் கையூட்டு பெற்று செயல்படுவதாக மறைமுகமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை  சாடினார்.

இதுகுறித்து தனது  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, தன் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும், அதனை நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ரோலக்ஸ் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையையே, தான் கூறியதாகவும், அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக்கூலி என்று கூறுவது குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதை போல் உள்ளதாக தெரிவித்தார்.  “மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை”  “மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு மீண்டும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.  இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்த அண்ணாமலை, கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு

@Manothangaraj. நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.
ஏற்கனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்.
அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு என்றும்  தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்று வரும் தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை . பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  எந்த கட்சியும் புனிதமான கட்சி என்று கூறமுடியாது. அரசியல் கட்சியைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான நல்லவர்கள் இருந்தால் சிறப்பான கட்சி. தவறு செய்பவர்கள் இருந்தால் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
பாஜக ஆட்சிக்கு வரும்போது பிற கட்சிகளைப் போல மாறிவிடக்கூடாது என்று நான் பயப்படுகிறேன் என்றவர், இன்று இருக்கும் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்போது மாறாமல் இதே நேர்மையை கடைபிடிக்குமா என்ற கேள்வியை நோக்கி, நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். அதற்காக பாஜக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது. என்னால் நாவடக்கத்தை கடைபிடிக்க முடியாது. நான் அப்படித்தான் பேசுவேன். நான் பேசுவது பிடிக்கவில்லை எனில் காதைப் பொத்திக் கொண்டு செல்லுங்கள்.
கவர்னர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்தால் தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா? அரசு கொண்டுவரும் அனைத்து மசோதாவையும் ஏற்க வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்தபின் அறநிலையத்துறை ஒரு கோவிலையாவது கட்டியிருக்கிறார்களா? கோவில் உண்டியல் பணத்தை வைத்து அதே கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.