சென்னை: பெரியாரிய ஆய்வாளரான வே. ஆனைமுத்து உடல் ராமச்சந்திரா மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது.

பெரியார் பெருந்தொண்டரும் பெரியாரின் படைப்புகள் முழுவதையும் தொகுத்து சமுதாயத்திற்கு வழங்கியவருமான பேரறிஞர் வே. ஆனைமுத்து தமது 96வது வயதில்  நேற்று இயற்கை எய்தினார். சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட ஏராளமான தலைவர்கள் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் அவர் உடல் ராமச்சந்திரா மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனைமுத்து மனைவி சுசிலா அம்மையார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். அவருடைய உடலும் இதே மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.