‘ஆதார்’ அப்டேட்: யு/ஏ சான்றிதழ்
இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ’சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் பி. சசிகுமார் தயாரிக்க, ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், ‘ஆதார்’.
‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவாகிறது.
இப்படத்தில் கருணாஸூடன் அருண்பாண்டியன், திலீபன், புகழ் பிரபாகர், இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். ராமர் படத்தொகுப்பு செய்கிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இணையத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தை மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள் கண்டு ரசித்திருக்கிறார்கள்.
தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு /ஏ சான்றிதழ் பெற்றிருப்தாக படக்குழு தெரிவித்துள்ளது.
விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் படமே ‘ஆதார்’ “ என்றார்.