சென்னை: எதிர்காலத்தை பற்றி சிந்தித்து, தூரநோக்குடன் செயல்படுபவனே உண்மையான தலைவன் என தொண்டாமுத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி டிவிட் பதிவிட்டுள்ளார்.

தலைவனுக்கு, தொண்டனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். கடந்த காலத்தில் இருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைகளுடன், எதிர்காலத்தை பற்றியும் சிந்தித்து, தூரநோக்குடன் செயல்படுபவனே உண்மையான தலைவன் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் திமுக பெற்றுள்ள வாக்கு வித்தியாசம் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.