மதுரை: தமிழகத்​தில்  இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டம் கொண்டு வரு​வது குறித்து தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது.

தமிழ்நாட்டில், மறைந்தோர் இறுதி ஊர்வலங்களின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டு ஆடும் சிலரின் அலப்பறை மற்றும்  இறுதி ஊர்வலத்தில் போது, பிணத்துடன் எடுத்துசசெல்லுப்படும், பூக்களை பொதுமக்கள் மீது வீசி எறிவது போன்றவற்றால் அவ்வப்போது சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இறுதி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டியது குறித்து, தமிழ்நாடு காவல்துறை (DGP)  ஏற்கனவே சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், 2025ம் ஆண்டு மார்ச் 5ந்தேதி அன்று  கல்​லூரி மாணவி​கள் 25 பேர் பயணம் செய்த கல்​லூரிப்பேருந்துமீது, இறுதி ஊர்​வலத்​தில் சென்றவர்​கள்  சில, பூக்களை வீசி எறிந்ததுடன்,போதை​யில் பேருந்தை நிறுத்தி மாணவி​களிடம்  ஆபாச​மாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அந்த பேருந்தின் ஓட்​டுநரையும் தாக்​கி பேருந்​தை​ சேதப்​படுத்​தினர்.

இதுதொடர்​பான புகாரின் பேரில்  வழக்கு பதிவு  போலீஸார் சங்​கர், அஜித்​கு​மார், சந்​திர​போஸ் உள்பட பலர் மீது வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கில் கைது, சம்பந்தப்பட்ட 3 பேரும்,  முன்​ஜாமீன் கோரி மூவரும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி கே.கே.​ராமகிருஷ்ணன் , மது போதை​யில் இருந்​தவர்​கள் மாணவிகளிடம் நடந்துகொண்ட செயலை சாதா​ரண​மாகக்கருத முடி​யாது.

இறுதி ஊர்​வலங்​களில் பங்​கேற்​பது ஒரு சமூக மற்​றும் கலாச்​சார நடை​முறை​யாக இருந்​தா​லும், அது பொது பாதுகாப்​புக்கு ஆபத்தை விளைவிக்​கவோ, வன்​முறை அல்​லது ஒழுங்​கீனச் செயல்​களில் ஈடு​படவோ காரண​மாக இருக்​கக்கூடாது. அதனால், புகார் குறித்து,  மனு​தா​ரர்​களை காவலில் எடுத்து விசா​ரிக்க வேண்​டும்.  அவர்களின் முன்​ஜாமீன் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்​றன என்று உத்தரவிட்டார்.

மேலும்,  கடலூரில் இறுதி ஊர்​வலத்​தில் சென்​றவர்​கள் வீசிய மாலை​யால் பொறி​யாளர் ஒருவர் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்தது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்து பல உத்​தர​வு​களைப் பிறப்​பித்​துள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர், இறுதி ஊர்வலங்களை  ஒழுங்​குபடுத்த புதிய சட்​டத்தை இயற்​று​வது குறித்து ஆராய தலை​மைச் செயலருக்கு உத்​தர​விடப்​படு​கிறது.

இது தொடர்​பாக ஜூலை 31-க்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். வி​சா​ரணை ஜூலை 31-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது.

[youtube-feed feed=1]